Skip to main content

கல்விக் கொள்ளை தடுக்க

தனியார் பள்ளி கட்டணத்தை அரசே வசூல் செய்து, தனியார் பள்ளியின் பராமறிப்பு செலவுக்கு கொடுக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க அனைவரும் விரும்பும் விதத்தில் அவை செயல்பட வேண்டும். அரசு பள்ளிகளால் அதிக மாணவர்களை பராமரிக்க முடியாத நிலையில் இருந்தால், அங்கு எளியவர்களுக்கு வழி விடும் வகையில் மட்டும் செல்வந்தர்கள் தனியார் பள்ளிகளை நாட வேண்டும். தனியார் பள்ளி கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்து அவற்றை அரசே வசூல் செய்து, தனியார் பள்ளியின் பராமறிப்பு செலவுக்கு கொடுக்க வேண்டும். அதில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசே சம்பள பட்டுவாடா செய்திடல் வேண்டும். அப்போதுதான் ஒரே தர கல்வி அனைவருக்கும் கிடைக்கும். அப்போது தான் வியாபார நோக்கில் கல்வி நிறுவனம் நடத்தி பெற்றோரையும், ஆசிரியர்களையும் ஒரு சேர சுரண்டி கொழுக்கும் கல்வி கொள்ளையர்களிடமிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரையும் காத்து. கல்வியில் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இதனால் கல்வியை வைத்து கொள்ளையடிக்கும் கூட்டத்தை விரட்டி விட்டு சேவை மனப்பான்மையுடன் உள்ளவர்கள் துணையுடன் கல்வியை சீரமைக்கலாம். ஆனால் அதற்கு இன்றைய அரசியல்வாதிகள் தடையாக இருப்பார்கள் காரணம் அவர்களே கல்வி கொள்ளையர்களாக இருப்பது மற்றும் அவர்களுக்கு இந்த கொள்ளையர்களிடம் இருந்து கிடைக்கும் கப்பம்.

இது சாத்தியம் இல்லை என நினைக்கும் அரசியல் வாதிகள், அவர்கள் அரசியலில் இருந்து விலகி, எங்களுக்கு ஆதரவு தரட்டும் நாங்கள் சாத்தியப்படுத்தி காட்டுகிறோம்.

திகழொளிபோல் உலகம் திரட்டிச் சேர்த்து மண்டலத்தில் மாய்கையற சத்தியம் நாட்ட
முயலும் சிவராஜா
குன்றத்தூர், சென்னை - 600 069

Comments

Popular posts from this blog

எம்மை பற்றி

சொல் அருவி சுவை வழிய புல்லுருவி புல்லுவர்கள் நா பொழியும் தெள்ளுரை கேட்டோர் மனம் மயங்கி பொல்லா பாதகரை நல்லோராய் நாடிச்செல புவியில் நலிவோர் குன்றா நிலையை யாம் கண்டோம். உண்மை விளம்பிக்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர்  முன்மொழிவோர் எவருமின்றி இருப்பவரை முன் மொழிந்து  பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும் அடியேன் குறிக்கோள் மற்றும்  பணி : திருவருளும், குருவருளும்   திகழொளிபோல் உலகம் திரட்டிச் சேர்த்து மண்டலத்தில் மாய்கையற சத்தியம் நாட்ட எம்மை கருவியாக்கி ஆட்டுவிக்க இசைந்து இருப்பதும், அவ்வாறு இருக்க விரும்புபவர்களுடன் இணைந்து செயல்படுவதுமே  அடியேன் பணியும், குறிக்கோளும் இக் குறிக்கோளை தேர்வு செய்த காரணம் சமூக சம நிலையை பேணுவதற்கு, அரசியலும், ஆன்மீகமும் முக்கிய காரணிகள். முன்னது எல்லோருக்கும் எல்லா வளங்களும் சமமாக கிடைக்கவும், பகிர்ந்து அளிக்கவும், வளங்கள் சிலருக்கு கணக்கில்லாமல் குவிவதை மட்டு படுத்துவதற்கும். அதற்கு பின்னது மக்களின் ஆசை, ஆணவம், ...

ஆன்மீக மண் தமிழ்நாடு

பெரியார் மண் என்பதை விட   அற பக்தி இலக்கியங்கள் தழைத்த ஆன்மீக மண் தமிழ்நாடு, என்பதே தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும். சிலரின் அறியாமை, ஆணவத்தால் ஈவெரா காரியமாற்ற காரணம் இருந்தது. காரணம் வலுவாய் இருந்ததால், காரியம் வீரியமாய் இருந்தது. தோள் கொடுத்தோரில் ஆன்மீகவாதிகள் பலர். உலகாண்ட இராசராசன், கரிகாலன்,மனுநீதிச் சோழன், அறம் சொன்ன ஒளவை, வள்ளுவன் உலவி அற பக்தி இலக்கியங்கள் தழைத்த ஆன்மீக மண் தமிழ்நாடு யார் கடவுள்… பக்திக்கு பலி கேட்பவனா? பசிக்கு உணவு அளிப்பவனா? சிந்தித்துப் பார் - என்று ஈவெரா கேள்வி எழுப்பியதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜீவாத்மாவும் பரமாத்மாவும்(கடவுள்) வேறுபடாத ஒன்றே என்ற அத்வைத கருத்தை வலியுறுத்தி தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவன் லிங்கம் என்று பதிலுடன் யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என்று வழி சொன்ன திருமூலர் வாழ்ந்த மண். ஆன்மீக மண். எல்லா உயிகளுக்குள்ளும் சிவன்,கடவுள் இருக்கிறார் என்று உணராதவர்களுக்கு புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல் உள்ளிருக்கு முணர்ச்சியில் லாதவர் நள்ளி ருப்பர் நரகக் குழியிலே என்று சாபம் கொடுத்து, தண்டனையும் கொடுத்த திருநாவுக்கர...

ஒரே தர கல்வி நிறுவனங்கள் வேண்டும்

நீட் தேர்வு தொடர்பாக நீதிபதி A.K இராஜன் குழுவுக்கு எழுதிய கடிதம் ஐயா வணக்கம், நீட் தேர்வு தொடர்பாக எமது கருத்து வெவ்வேறு தரகல்வி நிறுவனங்கள் (CBSE,MATRIC & இன்னும் பிற) செயல்படும் நிலையை களையாமல், ஒரே தரமாக்காமல். நீட் போன்ற தேர்வுகள் நடத்துவது சமமற்றவர்களை போட்டி போட செய்வது போன்றது அது முறையற்றது எந்த தர்ம நீதியினாலும் நியாயப்படுத்த முடியாதது தட கள விளையாட்டுகளில் கூட வயதை வைத்தும், எடையை வைத்து சம பலம் கொண்ட பிரிவுகளாக பிரித்து, சம பலம் உள்ளவர்களுக்கிடையேதான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதுதான் தர்மம் அதை வலியுறுத்தும் முகத்தான், நடந்ததாயினும், புனையப்பட்டது என்றாலும் ஆயுதங்கள் இழந்து விட்ட இராவணனை பார்த்து, ஆயுதம் இல்லாதவர்களிடம் ஆயுதப் பிரயோகம் செய்வது தர்மமாகாது என்றே "இன்று போய் நாளை வா" என ராமன் கூறியதாக ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு நாளை வா! என நல்கினன் - நாகு இளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். என்ற பாடலின் வழி போட்டியாயினும், போர் என்றாலும் ஆயுததாரி ஆயுததாரியுடன் தான் போரிட வேண்டும் என்ற தர்மத்தை போதி...