சமூக அதிகாரம் சீராக அனைத்து இனங்களுக்கும்,அதன் உட் பிரிவுகளுக்கும் பகிர்ந்து அளித்து,அங்கீகரிக்க வேண்டும்
உட்பிரிவுகள் கொண்ட பல்லினகுழுக்களின் ஒருங்கிணைப்புதான் இந்திய சமூக அமைப்பு, எனவே சமூக அதிகாரம் சீராக அனைத்து இனங்களுக்கும்,அதன் உட் பிரிவுகளுக்கும் பகிர்ந்து அளித்து,அங்கீகரிக்க வேண்டும், அது தான் ஜனநாயகம். அதற்குத்தான் இட ஒதுக்கீடு. அது ஜனநாயகம் காக்க செய்த ஏற்பாடு.
பலருக்கும் இதில் புரிதல் இல்லை, எனவே இட ஒதுக்கீட்டை சலுகை என்றும் பொருளாதர மேம்பாட்டிற்கான கருவியாகவும் கருதுகின்றனர், மாறாக இட ஒதுக்கீடு இனக்குழுக்கள், அதன் உட்பிரிவுகள் அதிகாரம் பெறுவதற்கான வழி மேலும் அது அவர்களின் உரிமை.
இட ஒதுக்கீடு எனும் ஜனநாயக கடமை நிறைவேற்றவேண்டிய,அதில்சிறிது நிறைவேற்றிய,இயக்கங்கள் அவற்றை சலுகையாகவும்,தாம் அவற்றை அவர்களுக்கு காட்டியதாகவும்,ஏன் இன்னும் சிலர் அவர்கள் இட்ட பிச்சையாகவும் கருதினால், மன்னிக்க, நாம் எம் இயல்பில் இருந்து மிக கீழிறங்கி சொல்கிறோம் அது ஆணவ மூடர் இயக்கம்
உட்பிரிவுகள் அதாவது சாதியாக அறியப்படுபவை, பல்வேறு காரணங்களால்,தனித்தனியாக, தனித்துவமான, அவர்களுக்கே உரிய பண்புகளுடன் இயங்குவதால், மேலும் கிராமங்கள் தோறும் தனித்தனி குடியிருப்பு,ஏன் இடுகாடு சுடுகாடுவரை தனித்தனியாக இருப்பதால், சமூக அங்கீகாரத்திற்கான இடஒதுக்கீடு தொடர வேண்டியதாகிறது.
பல்வேறு காரணங்களால் தனித்தனியாக, அவர்களுக்கே உரிய பண்புகளுடன் இயங்கும் உட்பிரிவுகள், ஒரு பிரிவு, மற்ற பிரிவை வியக்காமலும் இகழாமல் இருக்க பழக வேண்டும், காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இது புறநானூறு காட்டும் வழி.
Comments
Post a Comment