மக்களை அறிவால் இணைக்க முடியாது என்றே உணர்வால் இணைக்க ஆன்மீகத்தில் அதை வைத்தனர்
அறம், மறம், ஆன்மீகத்தில் உயர்ந்திருந்த நம் முன்னோரை காட்டுமிராண்டிகளாக காட்டி தம்மை உயர்த்தி கொள்ள தகாதன செய்தோரை சொல்வோரை தலைவர்களாக காட்டப் பட்டவரை தாங்கி பிடிப்பவர் சிந்தனைக்கு. பல நூறுநூறு ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த நம்முன்னோர் நமக்கு பயிற்றுவிக்க செய்த சிந்தனை உழைப்பு அர்த்தநாரீஸ்வர் சிலையும், ஓவியமும். அது அறிவிற் சிறந்த நம் முன்னோர் ஆணும் பெண்ணும் சமம்(50/50), கணவன் மனைவி சமமாக ஒருமித்திருக்க வேண்டும் என்று உணர்த்த செய்த ஏற்பாடு, கல்லால் செய்யப்பட்ட புத்தகம்.
பல நூறுநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கும் சிந்தனை சிலையாக இருக்கும் போதே, 90 ஆண்டுகளுக்கு முன் பெரியவர் ஈவேரா தான் முதன் முதலாக சிந்தித்தார் என்று மனமறிந்து நா கூசாமல் பொய் உரைக்கின்றார், நேர்மை தவறி நடக்கின்றார், அவர்கள் பின் சென்று நம் பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, ஓட்டன், ஓட்டி என்று நம் பரன் பரையை கேவலப்படுத்தாது இருக்க முயல்வோம்.,மக்களை, கனவன் மனைவி என்றாலும், அறிவால் தொடர்ந்து இணைந்திருக்க செய்ய முடியாது என்றே உணர்வால், அன்பால், இறை அச்சத்தால் இணைக்க ஆன்மீகத்தில் அதை வைத்தனர் முன்னோர்,
மாநிலத்து மக்களெல்லாம் நீதிபதியாய், அவர் மனதையே நீதிமன்றமாக்க ஆன்மிகமே அருமருந்து. அதனால்தான், நம் ராசராசன் வின்னுயர பொது(கோயில்) கட்டினான், அவன் வழி நடப்போம், அறம், மறம், ஆன்மீகம் போற்ற வாரீர்
Comments
Post a Comment